புதுச்சேரி : உயிர்துளி அமைப்பு சார்பில் புற்றுநோயாளிகளுக்காக நடத்தப்பட்ட ரத்த தான முகாமில், 42 பேர் ரத்த தானம் வழங்கினர்.
ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புற்றுநோயாளிகள், விபத்தில் சிக்கி அனுமதிக்கப்படும் நோயாளிகள், பிரசவம், குழந்தைகளுக்கான இருதய சிகிச்சைகளுக்குரத்தம் தட்டுப்பாடு நிலவுகிறது.இதையொட்டி, ஜிப்மர் ரத்த வங்கி மற்றும் உயிர்துளி, கவிபாரதியார் லயன்ஸ் சங்கம் சார்பில், நெல்லித்தோப்பு கீர்த்தி மகாலில், அவசர கால ரத்த தான முகாம் நேற்று நடந்தது. உயிர்துளி நிறுவனர் பிரபு முன்னிலை வகித்தார்.முகாமில், 42 கொடையாளர்கள், ரத்த தானம் வழங்கினர்.முகாம் ஏற்பாடுகளை உயிர்துளி தன்னார்வலர்கள் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE