சென்னை: சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை, 'நிவார்' புயல் குறி வைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன், 'வர்தா' புயல், சென்னையை பதம் பார்த்தது போல், 'நிவார்' புயல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை தாக்குவதற்கான அபாயம் உள்ளது.
புயலின் தாக்கத்தால், நாளை(நவ.,24) அதிகாலை முதல், சென்னை மற்றும் சுற்றுப்புற கடலோர மாவட்டங்களில், அதிக கன மழை பெய்யும். திடீர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்படலாம். எனவே, முன்னெச்சரிக்கை பணிகளை துவங்கவும், மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்கவும் வேண்டிய நிலை, அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

புயல், மாமல்லபுரம் அருகே கரை கடக்கும் என்பதால், கல்பாக்கம் அணு மின் நிலையம், வல்லுார், எண்ணுார் மின் நிலையங்கள், சென்னை, எண்ணுார், காரைக்கால், பரங்கிப்பேட்டை, நாகை மற்றும் கடலுார் துறைமுகங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE