செங்கல்பட்டு : செங்கல்பட்டில், பாலாற்று நீரில் மூழ்கி, சிறுவன் இறந்தான்.
செங்கல்பட்டு, ராமபாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் லலித்குமார், 17. இவர், நண்பர்களுடன், நேற்று முன்தினம், பழவேரி பாலாற்றில் குளிக்க சென்றார்.அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற சிறுவன், மீண்டு வரவில்லை. நண்பர்கள் மற்றும் உறவினர், போலீசார் தேடியும் கிடைக்கவில்லை.தொடர்ந்து, இருங்குன்றபள்ளி பாலாற்றில், சிறுவன் உடல், நேற்று, கரை ஒதுங்கியது.தகவலறிந்து வந்த செங்கல்பட்டு போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE