காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, கடந்த ஜூன் மாதம், மாவட்ட வருவாய் அலுவலராக முத்துராமலிங்கம் நியமிக்கப்பட்டார்.அப்போது, கலெக்டராக பணியாற்றிய பொன்னையா வுக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், பல நாட்கள் விடுமுறையில் இருந்தார்.அக்டோபர் இறுதியில், கலெக்டர் பொன்னையா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, மகேஸ்வரி நியமிக்கப்பட்டதை அடுத்து, இவர், மீண்டும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், திடீரென அவரை பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பணிக்கு, யாரும் நியமிக்கப்படவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE