சென்னை:'நிவர்' புயல் பேரிடர் பணியில் ஈடுபட, சென்னையில் ஐந்து வெள்ள நிவாரணக் குழுக்கள் மற்றும் ஒரு 'டைவிங்' குழுவும் தயாராக இருப்பதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கடற்படை தரப்பில் கூறியதாவது:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பிரிவு தரப்பில், 'நிவர்' புயலால் ஏற்படும் தாக்கத்தில் பணியாற்ற, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, ஐந்து வெள்ள நிவாரணக் குழுக்கள் மற்றும் ஒரு டைவிங் குழுவும், சென்னையில் தயாராக உள்ளன.
ஒரு வெள்ள நிவாரணக் குழு, நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் ஐ.என்.எஸ்., விமான நிலையத்தில் தயாராக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உதவி செய்ய, டைவிங் குழுவுடன், ஐ.என்.எஸ்., ஜோதி கப்பல், விசாகப்பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE