பரமக்குடி : பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் ஒன்றியத்தில் பயிரிடப்பட்டமிளகாய் செடிகள் காய்க்கும் பருவத்தில் மழைநீரில் மூழ்கி அழுகும்நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.பரமக்குடி சுற்று வட்டபகுதிகளான நயினார்கோவில், போகலுார், பரமக்குடியில் கடந்த ஆண்டை விட மழை பொழிவு அதிகளவில் உள்ளது. பருவம் தவறிய மழையால் நெல் சாகுபடிசெய்த நிலங்களில் பல ஏக்கர் பயிர்கள் கருகியதுடன், முளைப்புத்திறன் இன்றி வீணாகியது.தொடர்ந்து சில நாட்களாக பெய்து வரும் கனமழையை யடுத்து நயினார்கோவிலை சுற்றியுள்ள வல்லம், பகைவென்றி, அன்டக்குடியில் பல ஏக்கர் பயிர்கள் வீணாகி வருகிறது. மிளகாய் செடிகள் காய்க்கும் பருவத்தில் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலைக்கு சென்றுள்ளது.
விவசாயிகள் கூறியபோது, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வரை செலவு செய்து மிளகாய் பயிர்களை பாதுகாத்து வந்துள்ளோம். நல்ல மகசூல் கிடைக்கும்என நம்பியிருந்த சூழலில், மழை நீரில் மூழ்கி வீணாகி வருகிறது.எங்களால்முடிந்த வரை மோட்டார் வைத்தும் தண்ணீரை வெளியேற்றி வருகிறோம்,என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE