சென்னை:மத்திய அரசின் தொலை தொடர்பு ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு, நாடு முழுதும், ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்கள் செயல்படுகின்றனர்.
இவர்கள், தன்னார்வலர்களாக பல்வேறு விழிப்புணர்வு பணிகளிலும் பங்கேற்கின்றனர். இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கடலோர மாவட்டங்களில், பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் மின் இணைப்பு, தொலை தொடர்பு துண்டிக்கப்படும் நிலையில், பாதிப்புகள் குறித்த விபரங்களை அரசு அதிகாரிகள் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
இதற்காக, கடலுார், விழுப்புரம் மாவட்ட கலெக்டர்கள், ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.இதையடுத்து, தமிழகம் முழுதும் உள்ள பல்வேறு ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்கள், பேரிடர் தடுப்பு பணிக்காக களத்தில் இறங்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE