முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா தலைவர் மயில்,செயலாளர் முனியசாமி தலைமை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், சி.பி.எம்., தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விலைவாசியை கருத்தில்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் உதவித்தொகை ரூ.3000 வழங்கவும்,தனியார், அரசு நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE