ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் வல்லபைஐயப்பன் கோயிலில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் மேல் கொட்டிவாக்கத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருமுடி செலுத்தி பூஜைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.
மேல்கொட்டிவாக்கம் குருசாமி கிருஷ்ணன் தலைமையில் வேனில் வந்த 14 ஐயப்ப பக்தர்கள் இருமுடி காணிக்கை செலுத்தி மூலவர் வல்லபை ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் நெய்பிரசாதம் வழங்கப்பட்டது.காஞ்சிபுரத்தை சேர்ந்த குருசாமி கிருஷ்ணன் கூறியதாவது:வருடந்தோறும் கேரளா சபரிமலை செல்வது வழக்கம்.
இந்தாண்டு கொரோனா காரணமாக, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இருமுடி காணிக்கை செலுத்தலாம் என்பதை அறிந்து பூஜைகளை நிறைவேற்றி ஊர் திரும்புகிறோம் என்றார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன்கோயில் தலைமை குருசாமி மோகன்சுவாமி செய்திருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE