திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உயர்மட்ட பாலம் பணி நிறுத்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
திருக்கோவிலுார் பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள உயர்மட்ட பாலத்தில் பழுதடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதத்திற்கு முன் துவங்கப்பட்டது. துவங்கிய நாள் முதல் மந்தகதியில் பணிகள் நடைபெற்று வந்தது.இதனால், தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், வாகன ஓட்டிகளும், பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து வேகம் பிடித்த நிலையில் தீபாவளிக்காக நிறுத்தப்பட்ட பணியை மீண்டும் துவங்கி முடிப்பதில் ஒப்பந்ததாரர்கள் சுணக்கம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தற்போது, தரைப்பாலம் மாற்றுப் பாதையாக மாற்றப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.வாகன போக்குவரத்துக்கு ஈடுகொடுக்க முடியாத சூழலில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விபத்து ஏற்படுவது தினசரி வாடிக்கையாகி விட்டது.எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலம் பழுது நீக்கம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE