தியாகதுருகம் : புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர்.
'நிவர்' புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், பயிர்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. இதனால், கரும்பு, பருத்தி, உளுந்து, மக்காச்சோளம், வேர்க்கடலை, சாகுபடி செய்துள்ள வயலில் அதிக அளவு தண்ணீர் தேங்காத வகையில் விவசாயிகள், வரப்புகளை வெட்டி நீரை வெளியேற்ற வழி ஏற்படுத்தினர்.தென்னை விவசாயிகள் மட்டைகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் அவற்றை வெட்டி, முற்றிய தேங்காயை அறுவடை செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE