உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரைச் சேர்ந்தவர் ஆபிரகாம், 52; இவருக்கும் குழந்தைசாமி, 35; என்பவருக்கும் சொத்து தொடர்பாக சில தினங்களாக முன்விரோதம் இருந்து வந்தது.கடந்த 22ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். தகராறை தடுத்த ஜேம்சை கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில், குழந்தைசாமி, சகாயராஜ், எர்னோஸ் நிர்மல், ஜார்ஜ் அப்போலியன், மைக்கோல்ராஜ், அந்தோணிமுத்து ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிந்து எர்னோஸ் நிர்மல், 28; அப்போலியன், 24; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE