மொடக்குறிச்சி:கொடுமுடி அருகே, வாய்க்கால் பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், ஒரே ஊரைச் சேர்ந்த, விசைத்தறி உரிமையாளர்கள் நான்கு பேர் பலியாயினர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சீனாபுரம் அருகேயுள்ள வீரணம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் மணி, 5௦; ரகுநாதன், 4௧; சகோதரர்கள் கிருஷ்ணசாமி, ௪௪; ராஜா, ௪௦. விசைத்தறி உரிமையாளர்களான இவர்கள், கரூரில் உள்ள கார்மென்ட்ஸ், துணி கடைகளுக்கு, ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். அதற்கான பணத்தை வசூலிக்க, 15 நாட்களுக்கு ஒருமுறை செல்வர்.
பணம் வசூலிக்க, பெருந்துறையில் இருந்து, நேற்று மதியம், ௨:௦௦ மணிக்கு, மாருதி 800 காரில், நால்வரும் புறப்பட்டனர். மணி, காரை ஓட்டினார். கொடுமுடி அருகே, ஒத்தக்கடை, பள்ளக்காட்டூர் பகுதியில், ௩:௦௦ மணியளவில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர வாய்க்கால் பள்ளத்தில் செங்குத்தாக கவிழ்ந்து நின்றது. இதில், படுகாயமடைந்த நால்வரும், அதே இடத்தில் உயிரிழந்தனர்.கொடுமுடி போலீசார், நான்கு பேரின் உடல்களையும் மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE