திருப்பூர்:''அரசியல் உள்நோக்கத்துடன் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில், பி.எம்.எஸ்., பங்கேற்காது,'' என, தென் பாரத அமைப்பு செயலர் துரைராஜ் தெரிவித்தார்.
திருப்பூருக்கு நேற்று வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு, 29 சட்டங்களை, நான்கு தொகுப்புகளாக பிரித்து திருத்தம் செய்துள்ளது. அதில், இரண்டு தொகுப்புகளான, ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை, பாரதிய மஸ்துார் சங்கம் வரவேற்கிறது.சில பிரிவுகளை திருத்த வேண்டுமென போராட்டமும் நடத்திஉள்ளோம். தற்போது, தேவையான திருத்தம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கம்யூ., கட்சியினர் ஆளும் மாநிலங்களும், தொழிலாளர் சட்ட திருத்தத்தை அமல்படுத்தி உள்ளன. அதற்கு எதிராக போராடவும் தீர்மானித்து உள்ளோம். சில தொழிற்சங்கங்கள், அரசியல் உள்நோக்கத்துடன் அறிவித்துள்ள, 26ம் தேதி போராட்டத்தில், பி.எம்.எஸ்., பங்கேற்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE