திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் தாசில்தார் அலுவலகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் தாசில்தார் ஆனந்தன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு எதிர்வரும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்குபருவமழை குறித்தும் ஆலோசனை வழங்கினார்.பி.டி.ஓ., முபாரக் அலிபேக், திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, மின்சாரத்துறை, தீயணைப்புதுறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE