திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ரூ.1.5 கோடி மோசடி செய்த 3 நிறுவனங்களைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஆனந்த், ஜெயராஜ் உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டோர் மாரியம்மன் அறக்கட்டளையை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் பொதுமக்களிடம் ரூ.1 லட்சம் கடன் பெற்றுத்தருவதாகவும், அதற்கு ரூ.6100 கட்டினால் போதும் எனக்கூறி 300 க்கும் மேற்பட்டோரிடம் ரூ.1.5 கோடிக்கும் மேல் பெற்றுள்ளனர்.பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டபோது, கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மாரியம்மாள், நிவேதா அறக்கட்டளைகள், சிங்கம் மார்க்கெட்டிங் ஆகிய 3 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்து, ஜெயராஜ் 51, ஆனந்த் 32, காசியம்மாள் 45, மகாலட்சுமி ஆகியோரை கைது செய்துள்ளனர். ராமகிருஷ்ணன், வடிவேலு ஆகியோரை தேடி வருகின்றனர். 'இந்த நிதி நிறுவனங்களில் வேறு எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம்' என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE