கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி, பாதிப்படைவோர் எண்ணிக்கை முற்றிலும் குறைந்தது.
சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 618 பேர் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 619 ஆனது. இதில், 10 ஆயிரத்து 441 பேர் குணமடைந்துள்ளனர். 106 பேர் இறந்தனர். மீதமுள்ள 72 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE