கோவை:'நிவர்' புயல் காரணமாக கோவை - மயிலாடுதுறை இடையேயான ஜன சதாப்தி சிறப்பு ரயில், இன்று பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.அதன்படி, கோவை - மயிலாடுதுறை இடையேயான ஜன சதாப்தி சிறப்பு ரயில்(02083/84) திருச்சி - மயிலாடுதுறை இடையே, இன்று பகுதிநேரம் ரத்து செய்யப்படுகிறது. கோவை வழியாக இயக்கப்படும் காரைக்கால் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்(06187), காரைக்கால் - திருச்சி இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படுகிறது.ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன்களுக்கான, டிக்கெட் கட்டணம்முழுவதும் திரும்ப வழங்கப்படுகிறது. இணையவழி டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, கட்டணம் தானியங்கி முறையில் செலுத்தப்படும்.ஸ்டேஷன் முன்பதிவு மையங்களில், டிக்கெட் பெற்றவர்கள் நேரில் சென்று கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE