திண்டுக்கல்;''பழநி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை திருவிழாவில், முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் பங்கேற்கலாம். தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்க அனுமதி இல்லை,'' என, திண்டுக்கல் கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
அவரது பேட்டி:பழநி முருகன் கோவிலில், நவ., 23 முதல் நவ., 29 வரை, திருக்கார்த்திகை விழா நடக்கிறது. அன்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறப்பு, 4:30 மணிக்கு விளாபூஜை, மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை, மாலை, 6:05 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படும். திருஆவினன்குடி, பெரியநாயகியம்மன் கோவில்களிலும் தீபம் ஏற்றுதல் நடக்கும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, பக்தர்களுக்கு அனுமதி இல்லை.திருக்கார்த்திகை நிகழ்வுகள், 'டிவி, பேஸ்புக், யு டியூப்'பில் ஒளிபரப்பப்படும். நவ., 29 அதிகாலை, 4:00 முதல் மதியம், 12:00 மணி வரை, ஒரு மணி நேரத்திற்கு, 1,000 பக்தர்கள் வீதம், தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இது, www.tnhrce.gov.inல் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே பொருந்தும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE