கடலுார்:வழிப்பறி வழக்கில் ஜாமினில் வெளியே வந்து, 11 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்தவர், போலீசாரிடம் சிக்கினார்.
கடலுார் மாவட்டம், புவனகிரியில், 2009ம் ஆண்டு நடந்த வழிப்பறி வழக்கில், குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த பார்பர் ராஜா, 34, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஜாமினில் வெளியே வந்தவர், 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். வேளாங்கண்ணி அடுத்த பாப்பாகோவில் என்ற இடத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவல்படி, கடலுார் டெல்டா பிரிவு போலீசார் அங்கு சென்று, அவரை கைது செய்து, நேற்று புவனகிரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE