கோவை:அகில இந்திய வேலை நிறுத்தம் நாளை நடைபெறவுள்ள நிலையில், கல்வித்துறை பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை அனைத்து தொழிற்சங்கங்களும் அகில இந்திய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. அகில இந்திய வேலைநிறுத்தத்திற்கு, கல்வி சங்கங்கள் சிலவும் ஆதரவு தெரிவித்துள்ளன.இந்நிலையில், நாளை, பள்ளி மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும், கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா உத்தரவிட்டுள்ளார். வருகை புரியாத பணியாளர்களுக்கு, 'நோ ஒர்க், நோ பே' என்ற அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE