அவிநாசி:பொதுவேலை நிறுத்த கோரிக்கைகளை முன்வைத்து, டூவீலர் மூலம், பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.பல்வேறு தொழிற்சங்கத்தினர் சார்பில்,நாளை பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தொழிலாளர்களின் ஆதரவை திரட்ட, அவிநாசி, தெக்கலுார், கருவலுார், பெரியாயிபாளையம், வஞ்சிபாளையம், ராக்கியாபாளையம், கணியாம்பூண்டி, மங்கலம் ரோடு, நியூ திருப்பூர் உட்பட பல பகுதிகளில் பிரசாரம் நடந்தது.இதில், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் முத்துசாமி, சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகி ஈஸ்வரமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட நிர்வாகி வெங்கடாசலம், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி இசாக், செல்வராஜ்,எல்.எல்.எப்., நிர்வாகி பெருமாள் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE