தேனி:தேனியில் மருந்துக்கடையில் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் அப்துல்ரகுமான் 46, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோயில் 2வது தெரு அப்துல்ரகுமான் 46. இவர் கோடாங்கிபட்டி திருச்செந்துாரில் சகோதரி நடத்தும் 'மலர் மெடிக்கல்' என்ற மருந்துக் கடையில் பணிபுரிந்தார். மக்களுக்கு ஊசிபோட்டு மருத்துவம் பார்த்த இவர் போலி டாக்டர் என புகார் சென்றது.
மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், டாக்டர்கள் தலைமையிலான குழுவினர் மருந்துக்கடையில் ஆய்வு செய்தனர். அதில் அப்துல்ரகுமான் பிளஸ் 1ல் பெயில் ஆகி பின் பிளஸ் 2 வை தனியாக முடித்து அஞ்சல்வழியில் பி.ஏ., வரலாறு முடித்தது தெரியவந்தது. இவரை பழனிச்செட்டிபட்டி போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE