கடலுார் : கடலுார் நகரில் சாலையோரம் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களை நெடுஞ் சாலைத் துறையினர் வெட்டி அகற்றினர்.
நிவர் புயல் சின்னம் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் நகரில் முக்கிய சாலையோரம் ஆபத்தான நிலையில் இருந்த மரங்கள், கிளைகளை நெடுஞ் சாலைத் துறையினர் வெட்டி, அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.கடலுார், சில்வர் பீச் செல்லும் சாலையின் குறுக்கே முறிந்து விழும் நிலையில் இருந்த மரங்கள் மற்றும் மரக் கிளைகளை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி அகற்றினர். நகரில் போக்குவரத்து மிகுந்த சாலையோரம் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களையும் வெட்டி அகற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE