நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நடுவீரப்பட்டு ஊராட்சித் தலைவர் சந்தோஷம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மண்டல துணை பி.டி.ஓ., சசிகலா கலந்து கொண்டு திட்டத்தினை பற்றி விளக்கினார். நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகளை பலர் துவங்கவில்லை. கலெக்டர் உத்தரவின் பேரில் பணிகள் துவங்காமல் இருக்கும் காரணங்களை கேட்டறிந்து, பணிகளை விரைந்து துவக்க அறிவுரை வழங்கினர்.பணி மேற்பார்வையாளர் ஜோதி, நடுவீரப்பட்டு முன்னாள் ஊராட்சித் தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் சீனுவாசன், ஊராட்சி செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE