பண்ருட்டி : பண்ருட்டி அருகே நிலவரப்பு தகராறில் இரு தரப்பையும் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தேவர். இவரது மனைவி வனிதா,45; சத்துணவு பொறுப்பாளர். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.கடந்த 21ம் தேதி வனிதா நிலத்திற்கு சென்ற போது ஞானசேகரன், அவரது மகன் ஸ்டாலின் சேர்ந்து திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
வனிதா கொடுத்த புகாரின் பேரில் ஞானசேகரன் அவரது மகன் ஸ்டாலின் மீது காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து ஞானசேகரனை,70; கைது செய்தனர்.ஞானசேகரன் கொடுத்த புகாரின்பேரில் மணிவாசகம், வனிதா மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE