கடலுார் : நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீனவ கிராமங்களுக்கு சென்று மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி, வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், நல்லவாடு முதல் தா.சோ.பேட்டை வரை 49 மீனவ கிராமங்களை உள்ளடக்கி 57.5 கி.மீ., நீளம் வரை கடற்கரை கொண்டது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார், கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், வெங்கடேசன் (பரங்கிப்பேட்டை) மற்றும் 8 போலீசார், ஊர்க்காவல் படையினர் 21 பேர் உட்பட 32 பேர், மாவட்டம் முழுவதும் மீனவ கிராமங்களுக்கு சென்று, பொது மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
கூரை, ஓடு மற்றும் பழுதடைந்த வீடுகள், மரங்களின் கீழ் அல்லது அருகில் இருக்கும் வீடுகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு அல்லது புயல் பாதுகாப்பு மையங்களுக்கு செல்லவும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்கவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE