சேத்தியாத்தோப்பு : அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க சேத்தியாத்தோப்பில் அனைத்து மின் தொழிலாளர்கள் சங்கத்தினருக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.
மின் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நாளை 26ம் தேதி நடக்கிறது.இந்த பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு அனைத்து மின் தொழிற் சங்க நிர்வாகிகள் சார்பில் சேத்தியாத்தோப்பில் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்தனர்.
சி.ஐ.டி.யூ., மாநில துணை செயலாளர் பழனிவேல், தொ.மு.ச., மாநில துணை செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினர்.சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் தேசிங்கு, மாவட்ட பொருளாளர் கோவிந்தராசு, கோட்ட தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் வெற்றிவேல், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்மணி உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE