சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக பேரிடர் மீட்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர்.
சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில், நிலைய போக்குவரத்து அலுவலர் பன்னீர், முன்னனி தீயணைப்பு வீரர் அசோக்குமார் மற்றும் வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்பு, நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான தளவாடங்கள், பேரிடர் மீட்பு உபகரணங்கள் மற்றும் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE