பாலக்காடு:குருவாயூர் ஏகாதசி விழாவையொட்டி, 'கேசவன்' யானையின் உருவச் சிலை முன், கோவில் தேவஸ்தான யானைகள் நினைவஞ்சலி செலுத்தின.கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் ஏகாதசி விழா, இந்தாண்டு சடங்குகளாக மட்டும் நடத்தப்படுகிறது.
குருவாயூர் கேசவன் யானை மறைந்து, 44 ஆண்டுகளாகிறது. யானையின் உருவச் சிலை அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும், கோவில் யானைகள், நினைவு அஞ்சலி செலுத்துவது வழக்கம். நேற்று, இரண்டு யானைகள் மட்டும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றன. தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனை நடந்தன.நிகழ்ச்சியில், இசைக்கலைஞர் மண்ணுார் ராஜகுமாரனுக்கு, செம்பை வைத்யநாத பாகவதர் நினைவு விருது வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE