உடுமலை:உடுமலை நகராட்சி வணிக வளாகங்களில், காலியாக உள்ள கடைகள் குத்தகைக்கு விடப்படுகிறது.உடுமலை நகராட்சி வணிக வளாகங்களில், ராஜேந்திரா ரோட்டில், 10 கடைகள், பழநி ரோடு, 1, பஸ் ஸ்டாண்ட் வெளிப்புற காலியிட பகுதியில், 3, உட்புறத்தில், 3, பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம், வெளிப்புற பகுதியில், 10 கடைகள், சத்திரம் வீதியில், 3, குட்டை கரையில், 1 மற்றும் வாரச்சந்தை குடோன், 1 என, 32 கடைகள் காலியாக உள்ளது.இக்கடைகள் குத்தகை அடிப்படையில், நடத்த விரும்புவோர் நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE