உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கான தொழிற்தேர்வு நடக்கிறது.தமிழகத்தில், 'நிவர் புயல்' காரணமாக, இன்று, முதல், 27ம் தேதி வரை உள்ள தொழிற்தேர்வுகள், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வுகள், டிச., 3ம் தேதி முதல், 5ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட தேதியில், பயிற்சியாளர்கள் தவறாமல் பங்கேற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த தொழிற்பயிற்சி நிலையங்களை அணுகலாம்.மேலும், 2019 சேர்க்கை மற்றும் 2018 சேர்க்கை துணைத்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு, டிச., 3ம் முதல், 5ம்தேதி வரை நடக்கிறது. பொறியியல் வரைபடம் தாள் மூன்று தேர்வு டிச., 3ம் தேதி காலையில் நடக்கிறது. இவ்வாறு, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE