மதுரை:''இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி பா.ஜ. என்ற எதிர்கட்சிகளின் பொய் பிரசாரம் எடுபடாது'' என மதுரையில் பா.ஜ. சிறுபான்மையினர் அணி மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ. அரசு மீது எந்த குற்றச்சாட்டுக்களையும் எதிர்கட்சிகளால் சுமத்த முடியவில்லை. இதனால் பா.ஜ. மதவாத கட்சி என காங். தி.மு.க. பொய் பிரசாரங்களை செய்கின்றன. எதிர்கட்சிகளின் பொய் பிரசாரம் எடுபடாமல் போனதை சமீபத்தில் நடந்த பீகார் சட்டசபை தேர்தல் முடிவு எடுத்து காட்டியுள்ளது.
தமிழகத்தில் பா.ஜ. தலைவர் முருகன் தலைமையிலான வேல் யாத்திரைக்கு அனைத்து சமூகத்தினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மதுரை வரும் வேல் யாத்திரையில் சிறுபான்மையினர் அதிகளவில் பங்கேற்பர். வேல் யாத்திரைக்கு போட்டியாக தற்போது தி.மு.க.வினர் அரசியல் உள்நோக்கத்து 'விடியலை நோக்கி' பேரணியில் ஈடுபடுகின்றனர். அது மக்களிடம் எடுபடாது என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE