சென்னை:ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக, வரும், 28ம் தேதி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில், கொரோனா நோய் பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்க பட்டது. நோய் பரவல் குறைந்ததை தொடர்ந்து, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இம்மாதம், 30ம் தேதி வரை அமலில் உள்ளது.
வரும், 30ம் தேதிக்கு பின், ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது ரத்து செய்யலாமா என, வரும் 28ம் தேதி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவினருடன், முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்த உள்ளார்.அதன்பின், ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை, முதல்வர் வெளியிடுவார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE