சென்னை:சென்னை விமான நிலைய ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதால், இங்கு தரையிறங்க வேண்டிய ஏழு விமானங்கள், ஒரு மணிநேரம் வரை தாமதமாக தரையிறங்கின.
கனமழையால் நேற்று இரவு திருச்சி செல்ல வேண்டிய விமான சேவை ரத்து செய்யப் பட்டது.'நிவர்' புயல் காரணமாக, சென்னை விமான நிலைய பகுதியில், நேற்று பிற்பகல், 3:30 மணி முதல் நல்ல மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலைய ஓடுபாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
இதில், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள், வழக்கம் போல் புறப்பட்டுச் சென்றன. ஆனால், தரையிறங்க வேண்டிய விமானங்கள், இங்கு தரையிறங்க முடியாமல் வானிலேயே வட்டமடித்தன. பின் மாலை, 5:30 மணிக்கு மேல் மழை சற்று குறைந்ததும், இந்த விமானங்கள், ஒரு மணிநேரம் வரை தாமதமாக, ஒன்றன் பின் ஒன்றாக, சென்னையில் தரையிறங்கின.நேற்று இரவு, 8:35 மணிக்கு திருச்சிக்கு செல்லவிருந்த, விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE