புதுடில்லி: அதிநவீன 'ஏர் இந்தியா ஒன்' விமானம் நேற்று(நவ.,24) தனது முதல் பயணத்தை துவங்கியது. டில்லியிலிருந்து சென்னை வந்த இந்த விமானத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணித்தார்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட, வி.வி.ஐ.பி.,க்கள் பயணிக்க, 'போயிங் - 777' அதிநவீன விமானம், அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா ஒன்' என அழைக்கப்படும் இந்த விமானம், முதல் பயணத்தை நேற்று துவக்கியது.

இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தன் மனைவியுடன் பயணித்தார். டில்லியில் இருந்து சென்னை வந்த ஜனாதிபதி, அங்கிருந்து வேறு விமானம் வாயிலாக, திருப்பதி கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE