சென்னை: வங்கக்கடலில் உருவான 'நிவர்' புயல், தீவிர புயலாக மாறியுள்ளது; அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகிய, 'நிவர்' புயல், இன்று(நவ.,25) இரவு, புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணி நிலவரப்படி, கடலூருக்கு 310 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு 380 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ள புயல், தீவிர புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு நோக்கி, 6 கி.மீ., வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. அடுத்த 6 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறி, காரைக்கால் - மாமல்லபுரம் இடையே, புதுச்சேரி அருகே, இன்று இரவு 'நிவர்' புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE