தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே டூவீலர் பின்புறம் மற்றொரு டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். வத்தலக்குண்டைச் சேர்ந்தவர் விஜய் 24. இவரது டூவீலரில் அக்கா துர்கா, அவரது மகன்கள் தர்ஸன், தருண் ஆகியோருடன் தேவதானப் பட்டியிலிருந்து வத்தலக்குண்டு சென்று கொண்டிருந்தார். மீனாட்சிபுரம் அருகே அட்டணம் பட்டியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி 24, என்பவர் ஓட்டிச் சென்ற டூவீலர், விஜயின் டூவீலர் பின்பக்கம் பலமாக மோதியது. இதில் கருத்தப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார். விஜய், துர்கா, சிறுவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
ரோட்டில் கிடந்த கருத்தப்பாண்டி டூவீலர் மீது ரெட்டியார்சத்திரத்தைச் சேர்ந்த முத்து கிருஷ்ணன் ஓட்டிச் சென்ற கார் மோதியது. இதில் டூவீலர் சேதமானது. தேவதானப்பட்டி போலீசார் முத்துகிருஷ்ணனிடம் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE