தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணையா 56. இவரது பெட்டிக்கடையில் 11 மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார்.
இவரை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.வடுகபட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி 45. வடுகபட்டி பிரிவு அருகே 10 மதுபாட்டில்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தார். இவரை தென்கரை போலீசார் கைது செய்தனர். போடி: -குலாளர் பாளையத்தை சேர்ந்தவர் பாண்டி 65. இவர் மதுபாட்டில்களை விற்பனை செய்ய முயன்றுள்ளார். போடி டவுன் போலீசார் இவரை கைது செய்து ஆறு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE