கம்பம் : கம்பம் சுற்றுப்பகுதிகளில் மண் அள்ளி கடத்தும் கும்பலின் நடவடிக்கை தொடர்கிறது.
கம்பத்தில் மணிகட்டி ஆலமரம் பகுதியில் மண் அள்ளும் கும்பல் கை வரிசையை காட்டி வருகிறது. புதுகுளம் மற்றும் 18 ம் கால்வாய் பகுதிகளில் மண் அள்ளி வருகின்றனர். காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி கிராமங்களில் உள்ள கும்பல் கூத்தனாட்சி கோயில் ஓடை, யானை கெஜம் ஓடைகளுக்கு மேகமலையில் இருந்து வரும் சுத்தமான மண்ணை கடத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. மழைநீர் வராமல் தடுக்கப்படுகிறது.
நுாற்றுக்கணக்கான சிறிய ஓடைகள் காணாமல் போய்விட்டன. ராயப்பன்பட்டி சண்முகாநதி அணைக்கு மேகமலையில் இருந்து தண்ணீர் வரத்து வாய்க்காலில் மண் அள்ளப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE