ஆண்டிபட்டி : சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகி முத்துவன்னியன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஆண்டிபட்டி நீதிமன்றம் எதிரே இக்கோயிலில் 49 அடி உயர மாகாளி அம்மன் சிலை உள்ளது. வளாகத்தில் ஐயப்பசுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. சுவாமி வரலாற்றை கூறும் சிற்பங்கள் உள்ளது. முல்லை பெரியாறு அணை பிரச்னையில் சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் இக்கோயிலில் இருமுடி செலுத்தி னர். தற்போது கொரோனா பாதிப்பால் சபரிமலை செல்வதற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் இருமுடி செலுத்தி தங்கள் விரதத்தை முடிக்கலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE