தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி பேரூராட்சி 15 வது வார்டில் பல மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை உள்ளது.
தெருக்களில் பதிக்கப்பட்ட குழாய்கள் பராமரிக்கப்படாததால் பல இடங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வார்டுக்கு குடிநீர் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. அந்த வார்டு மக்கள் பேரூராட்சியிடம் பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. இதனால் அவர்கள் பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டனர். விரைவில் சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என தேவதானப்பட்டி போலீசார் கூறியதால் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE