ரூ.5.26 லட்சம் மோசடிஇருவர் மீது வழக்குசிவகங்கை: திருச்சியை சேர்ந்த ரவி பார்மாசிட்டிக்கல் நிறுவன இயக்குனர். இவரது அலுவலக மேலாளர்லாரன்ஸ். தனியார் கிளினிக்குகளுக்கு தேவையான மருந்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு, கொரோனா சிகிச்சைக்காக மருந்து, மாத்திரை வழங்க கோரி 2020 ஜூலை 28ம் தேதியன்று ரூ.5.63 லட்சத்தை வங்கி மூலம் மருத்துவமனை கண்காணிப்பாளர் செந்தில் 36, வழங்கினார். இத்தொகையை பெற்ற பார்மாசிட்டிக்கல் நிர்வாகம்முதற்கட்டமாக 43 ஆயிரத்து 200 ரூபாய்க்கு மட்டுமே மருந்து, மாத்திரை வழங்கினர். அதற்கு பின் வழங்காமலும், எஞ்சிய தொகை ரூ.5.26 லட்சத்தை திரும்ப தராமல் இழுத்தடித்தனர். கண்காணிப்பாளர் செந்தில், சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதனிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவுஇன்ஸ்பெக்டர் பாரதிபிரியா, இயக்குனர் ரவி, மேலாளர் லாரன்ஸ் மீது வழக்கு பதிந்தார்.மேலுார் ஆசிரியர் பலிசிவகங்கை: சிவகங்கை அருகே சித்தலுார்விலக்கில் கார், டூவீலர் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் பலியானார். மதுரை கீரனுார் மாயாண்டி மகன் செல்வம் 40. இவர் மேலுாரில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர். டூவீலரில் பஞ்சாயி 60, பாக்கியசெல்வம் 32,இருவரை அழைத்து கொண்டு, நவ.,22 அன்று மாலை 5:15 மணிக்கு மதுரை சென்றார். சித்தலுார் விலக்கு அருகே சென்றபோது மதுரையில் இருந்து அவனியாபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார்ஓட்டிவந்த கார், டூவீலரில் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்தவிபத்தில் டூவீலரில் சென்ற மூவரும் காயமுற்றனர். மதுரையில் சிகிச்சையில் இருந்து ஆசிரியர் செல்வம், நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., ராஜா விசாரிக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE