மதுரை : ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்து அவசரச் சட்டம் கொண்டுவந்த தமிழக அரசை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டியது.
மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார்,'ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார்.ஏற்கனவே நீதிபதிகள், 'ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்த தமிழக அரசு சட்டம் கொண்டுவரும் என நம்புவதாக ஜூலையில் இந்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அவசரச் சட்டம் அல்லது சட்டத் திருத்தம் கொண்டுவர எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுத் தரப்பில் நவ.,24 ல் தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.
நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது. தமிழக அரசுத் தரப்பு, 'அவசரச் சட்டம் கொண்டுவந்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது,' என தெரிவித்தது. நீதிபதிகள், 'தமிழக அரசை பாராட்டுகிறோம்,' எனக்கூறி தீர்ப்பை ஒத்திவைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE