மதுரை : அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் மதுரை விவசாய கல்லுாரி உழவியல் துறை சார்பில் மேலவளவு விவசாயி களுக்கு கூட்டு பண்ணையத்தின் அவசியம் மற்றும் செயல்பாட்டு குறித்த பயிற்சி நடந்தது.
குன்னத்துார், கீழநெடுங்குளம், பூதகுடி, குலமங்கலம், தவிட்டாம்பட்டி, மாலைப்பட்டி மற்றும் மாங்குளம் கிராம விவசாயிகள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் சுப்பிரமணியன் கூட்டுப் பண்ணையத்தில் இயந்திர மயமாக்கல் குறித்து விளக்கினார். மேலவளவு கூட்டுப்பண்ணைய தலைவர் கோபாலன் பண்ணையத்தின் பயன்களை விளக்கினார். ஆராய்ச்சியாளர்கள் தமிழ்ச்செல்வன், ஆதித்யன் நேரடி நெல் விதைக்கும் கருவியின் செயல் விளக்கம் அளித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE