பேரையூர் : பேரையூர் தாலுகாவில் விவசாய நிலங்களில் விளையும் பயிர்களை காட்டுப்பன்றிகள் அழிப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
மலையடிவார பகுதியான பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, கீழப்பட்டி, சந்தையூர், மேலப்பட்டி, சாப்டூர், வண்டாரியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளம், கடலை, வாழை, கம்பு பயிரிடப் பட்டுள்ளன.பயிர்கள் வளரும் நிலையில் பன்றிகள் கூட்டமாக வந்து சோள தட்டைகளை கடித்து அழிக்கின்றன. இரவில் அவை வருவதால் விவசாயிகளால் தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பன்றிகள் பயிர்களை பாழாக்குகின்றன.வனத்துறையிடம் விவசாயிகள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கடன் வாங்கி கஷ்டப்பட்டு பயிர்களை வளர்த்தால் வளரும் நிலையிலே பன்றிகள் பாழாக்குவதால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையுற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE