வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத்தில் நெல் பயிர்களில் இலைகீற்று, இலைகோடு நோய் தாக்குதல் பரவலாக உள்ளது.
மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் சின்னையா, ராமமூர்த்தி, வட்டார வேளாண் அலுவலர் நவீனா, உதவி இயக்குனர் ராமசாமி கள ஆய்வு செய்து பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை தெரிவித்துஉள்ளனர்.குலைநோய் தாக்குதலை தவிர்க்க ஒரு லிட்டர் நீரில் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு ஒரு கிராம் கலந்து தெளிக்க வேண்டும். குலைநோய் பரவலை தடுக்க 0.5 சதவீதம் அஸாக்ஸிட்ராபின் அல்லது டிரைசைக்ளோசல்மருந்து நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சோதனை குழாய் மூலம் பாக்டீரியா, இலைகோடு நோயை உறுதிசெய்யும் முறை விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. வேளாண் அலுவலர்கள் சரவணன், தங்கையா, பாண்டியராஜன், சந்திரசேகரன், விக்டோரியா, அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் காந்திமதி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE