திருப்பூர்;திருப்பூர் அருகேயுள்ள வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலத்தில், மின் விளக்குகள் எரியாததால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.அவிநாசி - பல்லடத்தை இணைக்கும் வகையில் வஞ்சிபாளையம் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் சர்வீஸ் ரோடுகளும் உள்ளன.இந்த பாலத்தின் மீது மின் விளக்குகள் உள்ளன. ஆனால், கடந்த சில நாட்களாக, இந்த மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால், இருளில், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.அப்பகுதியினர் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலத்தில் பல மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இரவில் விளக்குகள் எரியாததால், அப்பகுதி முழுக்க இருள் சூழ்கிறது. இதனால், வண்டியில் செல்ல முடிவதில்லை. அதேநேரம், எதிரில் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளி, கண்களை கூச செய்கிறது. எனவே, மின் விளக்குளை உடனடியாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE