திருப்பூர்:தபால்நிலையங்களில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பெயரில் துவக்கப்படும் சேமிப்பு கணக்குகளுக்கு, ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படாது என, தபால் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.தபால் சேமிப்பு கணக்கை சுயமாக நிர்வகிக்கும், 18 வயது வரையுள்ள மைனர் குழந்தைகளுக்கு, ஏ.டி.ஏம்., மற்றும் டெபிட் அட்டை வழங்குவது தொடர்பாக, பல்வேறு விளக்கங்கள் கேட்டு, தபால் இயக்குனரகத்திற்கு தொடர்ந்து கோரிக்கைகள் அனுப்பப்படுகின்றன. இதையடுத்து, மைனர்களுக்கு ஏ.டி.எம்., அட்டை வழங்குவது குறித்து, தபால் இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.அதில், 'பெற்றோர் இயக்கினாலும், 18 வயதுக்கு கீழ் உள்ள மைனர்கள் சுயமாக நிர்வகித்தாலும், அவர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு, ஏ.டி.எம்., அட்டை வழங்கப்படாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE