பல்லடம்:பல்லடம் அருகே நெடுஞ்சாலையில் தடுப்புச்சுவர் அமைக்காததால், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.பல்லடத்தை அடுத்த, காமநாயக்கன்பாளையம் -- சோமனுார் செல்லும் ரோடு, மாநில நெடுஞ்சாலை வசம் உள்ளது. பொள்ளாச்சி -- மைசூரை இணைக்கும் இந்த நெடுஞ்சாலையில், சரக்கு வாகனங்கள், கன்டெய்னர்கள் என, எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோடு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. ஆனால், காரணம்பேட்டையை அடுத்த பருவாய் கிராமத்தில், உள்ள ஓடை செல்லும் பகுதியில் தடுப்பு அமைக்கப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், 'ஓடை செல்லும் பகுதியில், ரோட்டின் இருபுறமும் பெரிய பள்ளம் உள்ளது. டூவீலரில் சென்றவர்கள், பள்ளத்தில் விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன.இருப்பினும், நெடுஞ்சாலை துறையினர் இப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தாமல் உள்ளனர். எனவே, தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE